Friday, July 2, 2010

தபூசங்கர் கவிதைகள்





தபூ சங்கர்;

காதல் கவிதைகள் என்றாலே கற்பனையும்,பொய்களும்தான் என்ற கருத்தை தன்
கவிதைகளால் மாற்றியவர்.
இயல்பான வாழ்க்கை நிகழ்வுகளே இவர் கவிதைகள்.
சில சம்பவங்கள் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கலாம்.
படித்து ரசித்து,
பதில் அனுப்புங்கள்.


தபூ சங்கரின் சில புத்தகங்களை மின் நூலாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.


விழியீர்ப்பு விசை.
Do download this PDF online, which is a print version of his book
Devathaikalin Devathai.
Vetkathai Kettal enna Tharuvaai?
Vizhi Eerppu Visai.
  it and read it when your are free... You will love this guys writing.
*****************
1.எனக்கு பெண்
கிடைப்பது
முக்கியம் இல்லை.
என் காதலுக்கொரு
காதலி
கிடைக்க வேண்டும்


*****************

2.காதலை
எப்போது சந்தித்தேனோ,
அப்போது தொடங்கியது
என் வாழ்வு.
எனினும்
வாழ்நாள் முடிவதற்குள்ளாவது,
சந்தித்து விடவேண்டும்
என் காதலியை...!


*****************

3.என்னிடம்
கொட்டிக்கிடக்கும்
காதலை
எதைக் கொண்டும்
வாங்கி விட முடியாது,
காதலை தவிர...!

*****************

4.மருத்துவம்
படிக்காமல் போனதற்காக
ரொம்ப வருந்துகிறேன்.
படித்திருந்தால்
உன் இதயத்தில்
ஒபன் ஹார்ட் சர்ஜரி
செய்தாவது நுழைந்திருக்கலாம்.

*****************

5.உன்னை கேலி செய்பவனை எல்லாம்
முறைத்து பார்க்கிறாய்.
உன்னை நேசிக்கிற
என்னை மட்டும்
சாதாரணமாக கூட
பார்க்க மறுக்கிறாயே?

*****************

6.அஞ்சல் வழிக்கல்வியை
முதன்முதலில்
தொடங்கியது
டெல்லி பல்கலைகழகம்.
கொஞ்சல்வழிக் கல்வியை
முதன்முதலில்
தொடங்கியவள் நீ..!


*****************

7.சராசரியாய்
ஒரு நிமிடத்தில்
38 புயல்கள் தோன்றுகின்றன
இந்த பூமியில்.
இதில் எத்தனை புயல்கள்,
நீ சிரிப்பதால்
தோன்றிகிறதோ...!

*****************

8.இந்தியாவின் ரோஜா தலைநகரம்
பூனா.
ரோஜாக்களின் தலைநகரம்
உன் கூந்தல்.


*****************

9.ஒரு யுகம் என்பது,
43,20,000 ஆண்டுகள்.
உன்னுடன் வாழும்
ஒரு தேவ கணத்துக்கு
இணையாகுமா
அந்த ஒரு யுகம்?


*****************

10.தும்மல் வரும்போது
நம் உடலில்
இதயம் உட்பட அனைத்தும்
ஒரு நொடி நின்றுவிடும்.
நீ வரும்போது
தும்மலே நின்றுவிடும்

*****************

11.மனித உடலில்
உதடுகள் மட்டும்
வியர்ப்பதில்லை.
ஆனால்
உன் உதடுகள்தான்
என்னை அதிகம்
வியர்க்க வைக்கின்றன
.

*****************

12.உன் ஞாபகமாய்
என்னிடம் எதுவுமே இல்லை,
உன் ஞாபகத்தைத் தவிர...!


*****************

13.நிலா இல்லாத வானத்தை
நட்சத்திரங்கள்
அழகாக்குகின்றன,
நீ இல்லாத
வாழ்க்கையை
உன் ஞாபகங்கள்
அழகாக்குகின்றன.


*****************

14.உன்னைப் பிரிந்தும்
நான் உயிரோடு இருக்கிறேன்,
உன் ஞாபகத்தின் கருணையால்...!

*****************

15.என் விரலைப் பிடித்து
அ எழுதக் கற்றுத் தந்தது
அம்மா....,
என்னையே
விரலாய்ப் பிடித்து
காதல் எழுதக்
கற்றுத் தந்தது
நீ...!


*****************
16.உன் ஞாபகத்துக்குத்
தெரியவே தெரியாது,
என்னுடன் நீ
இல்லை என்பது...!

*****************

17.உன் ஞாபகத்தில்
நான் தொடங்கும்
நடைபயிற்சி,
நடைபயணமாய்
நீண்டுவிடுகிறது...!


*****************

18.இந்தப் பிறவி
மட்டுமல்லாமல்
அடுத்தப் பிறவியிலும்
உன் ஞாபகம் வேண்டும்
எனக்கு...!


*****************

19.காலம் போய்க் கொண்டே
இருந்தால்
எனக்கென்ன...?
உன் ஞாபகம்தான்
வந்து கொண்டே இருக்கிறதே...!

*****************

20.எங்கே யார்
உன்னை மறந்தாலும்
இங்கே
அழுகை வரவேண்டும்
எனக்கு...!

*****************

21.இத்தனையும்
என் ஞாபகத்தின்
 க்தி இல்லை,
உன் ஞாபகத்தின் சக்தி...!


*****************

22.எனக்குப் பிறகு
உன்னையே
நினைத்துக்
கொண்டிருப்பதற்காக
நான் செய்த
குட்டி இதயங்கள்தாம்
என்
கவிதைகள்...!


*****************

23.காற்றே
அவசரமொன்றுமில்லை,
அவள்
சுவாசக் குழலை
சேதப்படுத்திவிடாமல்
சென்று வா.
அப்படியே அவள்
இதயத்தில்
எங்காவது,
நான் இருக்கிறேனா
என்பதையும்
பார்த்துவிட்டு வா...!


*****************

24.
இந்த மலையைக் குடைந்து
இரயில்பாதை
அமைத்தவனுக்காவது
தெரியுமா?
உன்
கல்மனசுக்குள்
நுழைவது
எப்படி என்பது...?

*****************

25.என்னை நல்லவன் என்று
நினைத்துக்
கொண்டிருந்தேன்..
அந்த நினைப்பில்
மண் அள்ளிப்
போட்டுவிடும்
போலிருக்கிறது,
உன் மீதான காதல்...
உன் வீட்டு முன்
காய்ந்துகொண்டிருக்கும்
உனது
ஆடையைத்
திருடி வரச்சொல்லி
நச்சரிக்கிறதே
மனசு.....!

*****************

26.திடீரென்று
என்னிடம்
 நீ
கோபித்துக்கொண்டதற்குக்
காரணம் தெரியாமல்
யோசித்துக்
கொண்டிருந்தேன்.
கொஞ்ச நேரம் கழித்து
"நான்தான் கோபத்தில் இருக்கேன்ல்ல.?
வந்து சமாதானப்படுத்தினா
என்னவாம்?"
என்று நீ
சிணுங்கியபோதுதான்
புரிந்தது
உன் கோபத்திற்கான
காரணம்...!

*****************

27.நீயோ
சூரிய வெளிச்சம்
முகத்தில் படாமலிருக்க
புத்தகத்தால்
முகத்தை
மறைத்துக்கொள்கிறாய்,
சூரியனோ
உன்னைப்
பார்க்கமுடியாத
கோபத்தில்
எல்லோரையும்
சுட்டெரித்துக்
கொண்டிருக்கிறது....!


*****************

28.
ஓயாமல்
உன்னையே
நினைக்கிறேன்,
என் ஓய்விலும்
உன்னையே
நினைக்கிறேன்...!


*****************

29.நாலு வரிகளை
மட்டுமே
கொண்டதது
ஜப்பானின்
தேசிய கீதம்.
ஒரே ஒரு
வார்த்தையை
கொண்டது
என் காதல் கீதம்.
அது
உன் பெயர் தான்...!


*****************

30.ஐந்து கண்களை
கொண்டது
வெட்டுக்கிளி.
இரண்டு
கண்களைக் கொண்டு
என்னை
வெட்டும்
கிளி நீ...!

*****************
31.சிங்கத்தை
உதைத்தே
கொன்றுவிடும்
சக்தி கொண்டது
ஒட்டகம்.
என்னை பார்த்தே
கொன்றுவிடும்
சக்தி கொண்டவள்
நீ....!




****************
32.பகலைவிட
இரவில்
மேகங்கள் மெதுவாக
நகர்கின்றன.
நீ தூங்கும்போது
பூமியே
மெதுவாக
சுற்றும்போது
மேகம் மட்டும்
என்ன செய்யும்
பாவம்,.,!

****************
33.இந்த உலகம்
எத்தனையோ
சர்வாதிகாரிகளை
பார்த்திருக்கிறது.
ஆனால்
உன்னைப் போல
ஒரு
சர்வ அழகுகாரியை
இப்போதுதான்
பார்க்கிறது.

****************

34.உனக்கு
சமைக்கத் தெரியுமா?
துவைக்க தெரியுமா?
என்பது பற்றியெல்லாம்
எனக்கு கவலையில்லை.
உனக்கு
காதலிக்கத் தெரியுமா....?

****************
35.கும்பலில்
எல்லாம்
நீ போகாதே...
யார்யாரோ மிதிக்கிறார்கள்
உன் நிழலை...
****************
36.நேரம் போவதே
தெரியாமல்
உன்னோடு
பேசிக்கொண்டிருக்கையில்
ஒரேயொரு
கவலைதான் எனக்கு.
இந்த நேரம்
ஏன் போகிறதென்று.

****************
37.இந்த வீட்டில்
எந்த வேலையும்
உனக்கு இல்லை.
என்னை காதலிப்பதைத் தவிர....!

****************
38.துடிப்பதைவிட
உன்னை
நினைப்பதற்க்கே
நேரம்
சரியாக இருக்கிறது,
என் இதயத்திற்கு.

****************
39.கோயிலுக்கு
நேர்ந்துவிடும்
மாட்டைப் போல
உன்னை காதலிப்பதற்கென்றே,
நேர்ந்துவிட்டு விட்டேன்,
என்னை நானே,

****************
40.முனிவர்கள்
கடவுளை
பார்ப்பதற்க்காக
தவமிருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையே
பார்த்துவிட்டு
தவமிருக்கிறேன்.

****************
41.
வளர்ந்து கொண்டே இருக்கும்
உன் நினைவுகளை
வளரவே வளராத
என் இதயத்தில்
எப்படி
அடுக்கி வைப்பேன்.

****************
42.
இந்த உலகில்
எத்தனையோ
உலக அழகிகள்
இருக்கிறார்கள்.
ஆனால் நீயோ
ஒர் அழகான
உலகமாகவே
இருக்கிறாய் எனக்கு...!
****************
43.
உன்னிடம்
என் இதயத்தை
தொலைத்துவிட்டதாக
எப்போதும்
புலம்பியதில்லை
நான்.
எனக்குள் இருந்த
இதயத்தை
கண்டுபிடித்து
கொடுத்தவளே
நீ தான்....!

****************
44.நீ ஆசையாக
வளர்க்கும்
உன் வீட்டு
நாய்க்குட்டி கூட
எப்போதாவது
உன்னை பார்த்து
குரைக்கலாம்.
ஆனால்
எப்போதும்
உனக்காக
துடிக்க மட்டுமே
செய்யும்
என் இதயம்...!
****************
45.
இந்தா என் இதயம்.
விளையாடும்வரை
விளையாடிவிட்டு
தூக்கிப் போட்டுவிடு.
அது அதற்குதான்
படைக்கப்பட்டது.

எங்கள் தமிழ்

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
இதை உரக்கச் சொல்வோம் உலகுக்கு
இனம் ஒன்றாக மொழி வென்றாக‌
புதுவேலை எடுப்போம் விடிவுக்கு!

நம் வெற்றிப்பாதையில் நரிகள் வந்தால்
விருந்து வைப்போம் விண்ணுக்கு!

பிற‌ந்த பிள்ளை ந‌ட‌ந்து ப‌ழ‌க
கையில் வேலைக் கொடுப்போம்
பிற‌ந்த‌ குழ‌ந்தை இற‌ந்து பிற‌ந்தால்
வாளால் கீறிப் புதைப்போம்

யுத்த‌ச் ச‌த்த‌ம் கேட்டால் போதும்
முத்த‌ச் ச‌த்த‌ம் முடிப்போம்!
இர‌த்த‌க் குள‌த்தை நிர‌ப்பி நிர‌ப்பி
வெற்றித்தாம‌ரையை ப‌றிப்போம்!

எங்க‌ள் ம‌ண்ணைத் தொட்ட‌வ‌ன் கால்க‌ள்
எங்க‌ள் நில‌த்தில் உர‌மாகும்!
எங்க‌ள் பெண்ணைத் தொட்ட‌வ‌ன் கால்க‌ள்
எங்க‌ள் அடுப்பில் விற‌காகும்!

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
இதை உரக்கச் சொல்வோம் உலகுக்கு!